Tuesday, May 18, 2010

வானமே இடிந்தாலும் பயப்படாதீர்! - பாரதியார்



Bookmark and Share* இந்த உலகில் உள்ள அனைவரும் எதிர்த்து நின்றாலும் அச்சம் கொள்ளக்கூடாது.
தலையில் வானமே இடிந்து வந்து விழுந்தாலும் பயம் இருக்கக்கூடாது.
* பயம் என்னும் பேயினை அடித்துவிரட்டுங்கள். பொய் என்னும் பாம்பைக்
கொல்லுங்கள். மறைந்து வந்து தாக்கும் எமனும் நடுங்கும்படி விழிப்போடு
இருங்கள். 'உயிர்களைப் பறிக்கும் காலனே! உன்னைச் சிறு புல்போல
மதிக்கிறேன். என் கால் அருகே வந்தால் சற்றே மிதிப்பேன்' என்று மனதுக்குள்
அடிக்கடி சொல்லுங்கள்.
* காலம் மிக முக்கியமானது. அதுபோய் விட்டால் திரும்ப வராது.சென்றதையே
எண்ணி கவலை என்னும் குழியில் குமைந்து கிடக்கவும் கூடாது. இன்று புதிதாய்
பிறந்தோம் என்ற எண்ணத்துடன், திடமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழுங்கள்.
தீமையை விரட்டியடியுங்கள்.
* பெருமையையும், மேன்மையையும் பெறுவதற்கு முதலில் உங்களை நீங்களே வெல்ல
வேண்டும். வெல்லும் திறமை இல்லாமல் உலகில் எதையும் சாதிக்க முடியாது.
ஆனால், இதற்கெல்லாம் அன்னை பராசக்தியின் துணையும் வேண்டுமென்பதால் அதை
அவளிடம் வேண்டிப் பெறுங்கள்.
-பாரதியார்

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.